sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மனு வழங்கல்

/

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மனு வழங்கல்

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மனு வழங்கல்

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மனு வழங்கல்


ADDED : மே 21, 2024 11:17 AM

Google News

ADDED : மே 21, 2024 11:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: குழாய் பதிக்கும் பணியால், தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருப்பதை கண்டித்தும், அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் போதிய கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தியும், கரூர் மாவட்ட ஹிந்து முன்னணி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

அரவக்குறிச்சியில் இருந்து பழநி செல்லும் சாலையில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், குழாய் பதிக்கும் பணி தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குழிகள் சரிவர மூடப்படாமல் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, குழாய் பதிக்கும் பணியை பள்ளிகள் திறக்கும் முன் விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரியிடம் மனு அளித்தனர்.

இதே போல அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு செய்ய வரும் பொது மக்களுக்கு போதிய கழிவறை வசதி, இருக்கை வசதி, ஆவணங்களில் கையெழுத்திட அலுவலகம் செல்லும் போது நாற்காலி வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us