sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை தற்காலிக வாரச்சந்தையை கட்டமைத்து நடத்த மக்கள் கோரிக்கை

/

குளித்தலை தற்காலிக வாரச்சந்தையை கட்டமைத்து நடத்த மக்கள் கோரிக்கை

குளித்தலை தற்காலிக வாரச்சந்தையை கட்டமைத்து நடத்த மக்கள் கோரிக்கை

குளித்தலை தற்காலிக வாரச்சந்தையை கட்டமைத்து நடத்த மக்கள் கோரிக்கை


ADDED : செப் 09, 2024 07:32 AM

Google News

ADDED : செப் 09, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை நகராட்சியில், தற்காலிக வாரச்சந்தை என்ற பெயரில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளிக்கிழமை தோறும் மதியம் முதல் இரவு வரை, காவிரி நகர், கிளை நுாலகம், உழவர் சந்தை, அண்ணா நகர், சிறுவர் பூங்கா ஆகிய தார்ச்சாலையில் வியாபாரிகள், விவசாயிகள் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வாரச்சந்தையால், இப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகம், தனியார் மருத்துவமனை, தனியார் நிறுவனங்கள், சமுதாய மன்றம் ஆகியவகைக்கு வந்துச்செல்லும் அலுவலர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, இந்த வாரச்சந்தைக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கும் வகையில் வாரச்சந்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடம்பவனேஸ்வரர் கோவில் வெளிபிரகாரம், சுற்றுச்சுவர் பகுதியில் வாரச்சந்தை நடத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us