/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தியில் உயர் கல்வி வழிகாட்டு குழு பயிற்சி முகாம்
/
க.பரமத்தியில் உயர் கல்வி வழிகாட்டு குழு பயிற்சி முகாம்
க.பரமத்தியில் உயர் கல்வி வழிகாட்டு குழு பயிற்சி முகாம்
க.பரமத்தியில் உயர் கல்வி வழிகாட்டு குழு பயிற்சி முகாம்
ADDED : மே 19, 2024 03:03 AM
கரூர்: க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள, ஏழு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் உயர் கல்வி வழிகாட்டு குழு உறுப்பினருக்கான பயிற்சி நடைபெற்றது.
க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில், உயர் கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் அறிவழகன் தலைமை வகித்தார். க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட, ஏழு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், பள்ளி உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவி, துணைத் தலைவி, கல்வியாளர் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் என மொத்தம் 67 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
கருத்தாளர்களாக கவிதா, முரசொலி ஆகியோர் செயல்பட்டனர். பள்ளி அளவில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கான பணி குறித்து கூறப்பட்டது.
பயிற்சியில் நான் முதல்வன் திட்டம் குறித்தும் மற்றும் மாணவர்கள் மேற்படிப்பில் என்ன படிக்கலாம் என்பது குறித்தும், வேலை வாய்ப்பு குறித்தும் கருத்தாளர்கள் கூறினர்.

