sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ராமர் பாண்டி கொலை வழக்கில் கைதான மூவருக்கு குண்டாஸ்

/

ராமர் பாண்டி கொலை வழக்கில் கைதான மூவருக்கு குண்டாஸ்

ராமர் பாண்டி கொலை வழக்கில் கைதான மூவருக்கு குண்டாஸ்

ராமர் பாண்டி கொலை வழக்கில் கைதான மூவருக்கு குண்டாஸ்


ADDED : மே 20, 2024 01:50 AM

Google News

ADDED : மே 20, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே நடந்த, ராமர் பாண்டி கொலை வழக்கில் கைதான மேலும், 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம், அனுப்பனாடி பகுதியை சேர்ந்தவர் ராமர் பாண்டி, 37; இவர் கடந்த பிப்., 19ல், கரூர் நீதிமன்றத்தில், கொலை வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு, மதுரைக்கு டூவீலரில் சென்றார். அப்போது, ராமர் பாண்டியை காரில் பின் தொடர்ந்த மர்ம கும்பல் அவரை, அரவக்குறிச்சி அருகே தேரப்பாடி பகுதியில் சென்ற போது, அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, அரவக்குறிச்சி போலீசார், மதுரையை சேர்ந்த வினோத் கண்ணன், 26, மகேஷ்குமார், 24, தனுஷ், 21, ரமேஷ், 26, தர்மா, 25, ஆகியோரை கைது செய்தனர். அதில், வினோத் கண்ணன், மகேஷ்குமார் ஆகியோர் கடந்த, 11ல் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கரூர் எஸ்.பி., பிரபாகரின் பரிந்துரையை ஏற்று, நேற்று தனுஷ், ரமேஷ், தர்மா ஆகிய மூன்று பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் தங்க வேல் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோவை மத்திய சிறையில் உள்ள தனுஷ், ரமேஷ், தர்மா ஆகியோரிடம், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டதற்கான நகலை, அரவக்

குறிச்சி போலீசார் வழங்கினர்.






      Dinamalar
      Follow us