/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முற்செடிகளை அகற்றி தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
/
முற்செடிகளை அகற்றி தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 26, 2024 04:05 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மணப்பாறை நெடுஞ்சாலையில் தோகைமலையில் இருந்து சின்னரெட்டியப்பட்டி (டி.என்.பி.எல்.) நிறுவனம் வரை செல்லும், கரூர் - திருச்சி மாவட்ட எல்லையில் தார்ச்சாலை குண்டும் குழியுமாகவும் இருந்து வருகிறது.
மேலும் சாலையின் இருபுறங்களிலும் முற்செடிகள் வளர்ந்து, பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்து வருகிறது. நெடுஞ்சாலையை பராமரித்து வரும் தரகம்பட்டி நெடுஞ்சாலை அலுவலகத்தில் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் தரமற்ற சாலையை சரி செய்யகோரி பல முறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாவட்ட நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலையின் அவலங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

