/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆவணம் இல்லாததால் ரூ.71 ஆயிரம் பறிமுதல்
/
ஆவணம் இல்லாததால் ரூ.71 ஆயிரம் பறிமுதல்
ADDED : ஏப் 10, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை;லாரியில், ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற, 71 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.குளித்தலை அடுத்த, காவல்காரன்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலம் நோக்கி சென்ற லாரியை சோதனை செய்தனர். அதில் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், குள்ளம்பட்டியை சேர்ந்த -ராமலிங்கம் என்பவரிடம் இருந்து, 71 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

