ADDED : நவ 25, 2025 01:08 AM
அ நிறம் | அளவு
கரூர், கரூர் மாவட்டத்தில், இரண்டு போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த, 22ல், 240 போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
அதில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ., ராஜசேர்வை, மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவு எஸ்.ஐ., சுரேஷ் ஆகிய இரண்டு பேருக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
