ADDED : மார் 04, 2024 11:42 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி: வேலாயுதம்பாளையம் அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, வேலாயுதம் பாளையம் போலீசார், மசக்கவுண்டன்புதுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, டாஸ்மாக் கடை பின்புறம் ரயில்வே பாலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். அவரை கையும், களவுமாக பிடித்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
