/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராஜவாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் கலப்பதை தடுக்க கோரி மனு
/
ராஜவாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் கலப்பதை தடுக்க கோரி மனு
ராஜவாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் கலப்பதை தடுக்க கோரி மனு
ராஜவாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் கலப்பதை தடுக்க கோரி மனு
ADDED : செப் 10, 2024 05:26 AM
கரூர்: பள்ளபாளையம் ராஜவாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர், ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என, ஆண்டாங்கோவில் மேற்கு, கிழக்கு பாசன விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறி-யிருப்பதாவது:கரூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் பள்ளபா-ளையம் ராஜவாய்க்கால் வாயிலாக, 2,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தற்போது, கோவிந்தபாளையத்தில் தண்ணீர் வரத்து இல்லை.
இந்த ஊருக்கு முன்னதாகவே, மதகு வழியாக ஆற்றில் தண்ணீர் கலக்கப்படுகிறது. இது குறித்து பொதுப்பணி-துறை அதிகாரிகளிடம் கேட்டால், பாசன வாய்க்கால் துார்வாரும் பணி நடப்பதாக கூறுகின்றனர். இங்குள்ள பயிர்கள்
நீரின்றி காய்ந்து வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பணியை விரைவில் முடித்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

