ADDED : பிப் 18, 2025 01:03 AM
அ நிறம் | அளவு
எருது விடும் விழா
ஓசூர்:அஞ்செட்டியில் நேற்று எருது விடும் விழா நடந்தது. தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான காளைகள் வந்திருந்தன. விழா திடலில் ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த அலங்கார தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர். விழாவை காண, ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
