தொழிலாளியை கத்தியால் குத்திய பெயின்டர் மீது வழக்குப்பதிவு
தொழிலாளியை கத்தியால் குத்திய பெயின்டர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஏப் 09, 2025 01:29 AM
தொழிலாளியை கத்தியால் குத்திய பெயின்டர் மீது வழக்குப்பதிவு
கரூர்:கரூர் அருகே, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், பெயின்டரை கத்தியால் குத்திய, மற்றொரு பெயின்டர் மீது, போலீசார் வழக்குப்
பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், ராயனுார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கார்த்திகேயன், 25, பெயின்டர். அதே பகுதியை சேர்ந்தவர் ஜீவா, 45, இவரும் பெயின்டர். இருவருக்கும் இடையே, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த, 7ல் கார்த்திகேயன், ராயனுார் நான்கு சாலை பிரிவில் டீ கடை ஒன்றில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு சென்ற ஜீவா, தகாத வார்த்தை பேசி கார்த்திகேயனின் தோள் பட்டையில் கத்தியால் குத்தியுள்ளார். அதில், படுகாயமடைந்த கார்த்திகேயன், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, கார்த்திகேயன் கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார், ஜீவா மீது
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
