sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

 சிறைகளில் போலீசாரை தாக்கிய கைதி மீது வழக்கு

/

 சிறைகளில் போலீசாரை தாக்கிய கைதி மீது வழக்கு

 சிறைகளில் போலீசாரை தாக்கிய கைதி மீது வழக்கு

 சிறைகளில் போலீசாரை தாக்கிய கைதி மீது வழக்கு


ADDED : டிச 18, 2025 01:43 AM

Google News

ADDED : டிச 18, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: மூன்று சிறைகளுக்கு மாற்றப்பட்டு, நான்காவது சிறையிலும் சிறை அதிகாரியை தாக்கிய கைதி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே வடக்கு காருகுறிச்சியை சேர்ந்தவர் உக்கிரபாண்டி, 23. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருந்தனர்.

சிறை அதிகா ரிகளை தாக்கியதால், இவர் அம்பை, துாத்துக்குடி பேரூரணி, திருநெல்வேலி மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டிருந்தார். நவ., 26ல், இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, துாக்க மாத்திரை கேட்ட உக்கிரபாண்டி, ஸ்டாலின் சார்லஸ் என்ற சிறை காவலரிடம் தகராறில் ஈடுபட்டார். இதை தட்டிக் கேட்க வந்த பிற காவலர்களான பிரவீன், சார்ஜின் ஆகியோரையும் தாக்கினார். காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறை கண்காணிப்பாளர் வேலுமணி புகாரில், உக்கிரபாண்டி மீது நேசமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us