sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 விதைகள் அமைப்பு ஆண்டு விழா 720 மாணவர்களுக்கு விருது

/

 விதைகள் அமைப்பு ஆண்டு விழா 720 மாணவர்களுக்கு விருது

 விதைகள் அமைப்பு ஆண்டு விழா 720 மாணவர்களுக்கு விருது

 விதைகள் அமைப்பு ஆண்டு விழா 720 மாணவர்களுக்கு விருது


ADDED : டிச 30, 2025 06:07 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: விதைகள் தன்னார்வ அமைப்பின் 13வது ஆண்டு விழா, ஐந்தாம் ஆண்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடவு திருவிழா மற்றும் களப்பணிகளில் ஈடுபட்ட 720 மாணவர் களுக்கு விருது வழங்கும் விழா என, முப்பெரும் விழா வடக்குப்பட்டு திருவேணி ஆடிட்டோரியத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற, விழி விழிப்புணர்வு அறக்கட்டளை அறங்காவலர் சிவசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற கமாண்டர் அரவிந்தன், காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் தலைவர் பிரபு, ஜோதீஸ் ரெஸ்டாரன்ட் முருகேஷ், கல்பாக்கம் இந்தியன் நேவி கமாண்டர் இளந்தமிழ் கோமகன் ஆகியோர் ஆண்டு விழா மலரை வெளியிட்டனர்.

மரக்கன்று நடுதல், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு களப்பணிகளில் சிறப்பாக ஈடுபட்ட 720 மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.

முன்னதாக விதைகள் தன்னார்வ அமைப்பின் பொருளாளர் தேவராசன் வரவேற்றார்.

தலைவர் சரண் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us