sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் இலவசமாக மனு எழுத கூடுதல் ஊழியர் நியமிக்க கோரிக்கை

/

காஞ்சியில் இலவசமாக மனு எழுத கூடுதல் ஊழியர் நியமிக்க கோரிக்கை

காஞ்சியில் இலவசமாக மனு எழுத கூடுதல் ஊழியர் நியமிக்க கோரிக்கை

காஞ்சியில் இலவசமாக மனு எழுத கூடுதல் ஊழியர் நியமிக்க கோரிக்கை


ADDED : ஜூன் 08, 2025 10:30 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள், தாங்களாகவே கைப்பட மனு எழுதி கொண்டு வருகின்றனர்.

சிலர், கம்ப்யூட்டர் மையங்களில் தனக்கான கோரிக்கை மனுவை கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்து பிரின்ட் எடுத்து வருகின்றனர்.

ஆனால், எழுத, படிக்க தெரியாத சிலர், கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக எழுதி கொடுக்கும் மனுவை நம்பி வருகின்றனர். அவ்வாறு வருவோர்க்கு, இலவசமாக மனு எழுதி பெற நீண்ட நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இலவசமாக மனு எழுதி தர, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், கலெக்டர் வளாகத்தில் ஏற்கனவே நான்கு பேர் அமர்ந்து பணியாற்றுகின்றனர்.

இருப்பினும், கூடுதல் ஊழியர்கள் இலவசமாக மனு எழுதி தர பணியமர்த்த வேண்டும் என, மனு அளிக்க வருவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us