sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிக்னல் மாற்றத்தால் வாகன ஓட்டிகள் சிரமம்

/

சிக்னல் மாற்றத்தால் வாகன ஓட்டிகள் சிரமம்

சிக்னல் மாற்றத்தால் வாகன ஓட்டிகள் சிரமம்

சிக்னல் மாற்றத்தால் வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : ஏப் 08, 2025 12:55 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே, ரயில் வழித்தடம் செல்கிறது. இந்த ரயில் வழித்தடத்தில், மின்சாரம் ரயில், சரக்கு ரயில்கள் செல்கின்றன. இது போன்ற ரயில்கள் கடவுப்பாதை கடந்து சென்றதும், 200 மீட்டரில் ரயில் கேட் திறப்பதற்கு சிக்னல் விழும்.

அதன்பின், கேட் கீப்பர் கடவுப்பாதையின் கேட் திறந்து விடுவார். கடவுப்பாதை இருபுறமும் நிற்கும் வாகனங்கள் அதன் பிறகே கடந்து செல்லும்.

இதில், காஞ்சிபுரம் கோனேரிகுப்பம் ரயில் கடவுப்பாதையில் இருந்து, 200 மீட்டர் கடந்து செல்லும் போது, கடவுப்பாதை திறக்க சிக்னல் கிடைக்கும். தற்போது, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு ரயில் சென்ற பின் சிக்னல் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதனால், கோனேரிகுப்பம் ரயில் கடவுப்பாதையில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சரக்கு ரயில்கள் கடந்து செல்லும் போது, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

இதை தவிர்க்க முன்பு இருந்ததை போல, கோனேரிகுப்பம் ரயில் கடவுப்பாதையில் இருந்து, 200 மீட்டரில் சிக்னல் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us