sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் பிப்., 8ம் தேதி மஹா கும்பாபிஷேகம்

/

 திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் பிப்., 8ம் தேதி மஹா கும்பாபிஷேகம்

 திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் பிப்., 8ம் தேதி மஹா கும்பாபிஷேகம்

 திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் பிப்., 8ம் தேதி மஹா கும்பாபிஷேகம்


ADDED : டிச 18, 2025 06:22 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்: திம்மராஜம்பேட்டை, ராமலிங்கேஸ்வரர் கோவிலில், 13 ஆண்டுகளுக்கு பின், வரும் பிப்., 8ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கோவில் புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், பர்வதவர்த்தினி அம்பாள் உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

கடந்த, 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில், மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம், கொடி மரம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை உள்ளன.

மூலவர் சன்னிதியின் வலது புறத்தில் உத்சவர் உள்ளார். இடது புறத்தில் அய்யப்பன் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் அருள்பாலிக்கிறார்.

இந்த கோவிலில், மாசிமகம், கந்தசஷ்டி, நவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் விசேஷமாக நடைபெறுகின்றன.

இக்கோவிலில் ராஜகோபுரம் மற்றும் மண்டபம் உள்ளிட்டவை சிதிலம் அடைந்ததையடுத்து, சீர் செய்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, கோவில் கட்டடங்கள் பழுது பார்த்தல், கோவில் மூல ஸ்தானங்களில் உள்ள கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ள ன.

இதுகுறித்து, அக்கோவில் திருப்பணிக் குழுவினர் கூறியதாவது:

இக்கோவிலில் கடந்த 2012ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து மீண்டும் நடத்த திட்டமிட்டு புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. தற்போது 80 சதவீதம் பணிகள் நி றைவு பெற்றுள்ளன.

கோவில் விமானம், சுவாமி சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு அய்யப்பன் மற்றும் முருகபெருமானுக்கான சன்னிதிகளும் சீரமைக்கப்பட்டுள்ளன.

கோவில் வளாகத்தின் தரை பகுதியில் கருங்கல் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

பணிகள் முடிவுற்று வரும் பிப்ரவரி 8ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us