/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆலடிதோப்பு விநாயகருக்கு வரும் 15ல் கும்பாபிஷேகம்
/
ஆலடிதோப்பு விநாயகருக்கு வரும் 15ல் கும்பாபிஷேகம்
ADDED : டிச 10, 2024 07:59 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபரம் ஆலடி பிள்ளையார் கோவில் தோப்பு தெருவில், பழமையான வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதிவாசிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி, நாளை மறுநாள் காலை 6:00 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்வும், 14ம் தேதி இரவு 7:00 மணிக்கு, புதிதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அஷ்டபந்தனம் சாற்றப்பட உள்ளது.
வரும் 15ம் தேதி காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி, லஷ்மி ஹோமம் உள்ளிட்டவையும், காலை 9:45 மணிக்கு வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கின்றனர்.
காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், தீபாரானையும் நடைபெறுகிறது. காலை 11:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கும் நிகழ்வும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை ஆலடி பிள்ளையார் கோவில் தோப்பு தெருவாசிகள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

