/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
/
விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : டிச 16, 2024 02:41 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபரம் ஆலடி பிள்ளையார் கோவில் தோப்பு தெருவில், வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த 16ம் தேதி காலை 6:00 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு புதிதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது.
நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி, லஷ்மி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. காலை 9:45 மணிக்கு கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அய்யங்கார்குளம்:
காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமம், அங்கமுத்து அம்மாள் நகரில், கிராமத்தினர் சார்பில் சுந்தர விநாயகர் மற்றும் நவக்கிரஹ மூர்த்திகள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு சுவாமி கரிகோலம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு கணபதி பூஜை, புண்ணியாவசனம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவையும், இரவு 8:00 மணிக்கு பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது.
நேற்று காலை 7:30 மணிக்கு கோபூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம், கணபதி ஹோமமும், காலை 10:00 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மஹா அபிஷேகம், மஹாதீப ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் விழா குழுவினர், அய்யங்கார்குளம் கிராமம், அங்கமுத்து அம்மாள் நகரினர் இணைந்து செய்திருந்தனர்.

