sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

/

விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : டிச 16, 2024 02:41 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபரம் ஆலடி பிள்ளையார் கோவில் தோப்பு தெருவில், வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த 16ம் தேதி காலை 6:00 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு புதிதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது.

நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி, லஷ்மி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. காலை 9:45 மணிக்கு கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அய்யங்கார்குளம்:


காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமம், அங்கமுத்து அம்மாள் நகரில், கிராமத்தினர் சார்பில் சுந்தர விநாயகர் மற்றும் நவக்கிரஹ மூர்த்திகள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு சுவாமி கரிகோலம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு கணபதி பூஜை, புண்ணியாவசனம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவையும், இரவு 8:00 மணிக்கு பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது.

நேற்று காலை 7:30 மணிக்கு கோபூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம், கணபதி ஹோமமும், காலை 10:00 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து மஹா அபிஷேகம், மஹாதீப ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் விழா குழுவினர், அய்யங்கார்குளம் கிராமம், அங்கமுத்து அம்மாள் நகரினர் இணைந்து செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us