/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நான்கு முனை சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்படுமா?
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நான்கு முனை சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நான்கு முனை சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நான்கு முனை சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்படுமா?
ADDED : செப் 18, 2024 11:41 PM

நான்கு முனை சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதி தெரு வழியாக, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம், காமாட்சியம்மன் கோவில், பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள காமாட்சியம்மன் சன்னிதி தெருவுடன், அறப்பெரும்செல்வி குறுக்கு தெரு, செட்டிகுளம், பூக்கடை சத்திரம் பகுதிக்கு செல்லும் தெரு இணையும் நான்கு முனை சந்திப்பு உள்ளது.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் நான்குமுனை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன.
எனவே, நான்கு முனை சந்திப்பில், விபத்தை தவிர்க்கும் வகையில், வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.உமாசங்கர்,
காஞ்சிபுரம்.

