/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
16 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்
/
16 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 02, 2026 05:18 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 16 ஊராட்சிகளில் நாளை, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜா பாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன.
வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு -- செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம்.
தற்போது, 26வது சுற்றுக்கு நரப்பாக்கம், விஷார், வளையக்கரை, நந்தம்பாக்கம், சிவபுரம், துளசாபுரம், வல்லம், வெங்காடு, பெருங்கோழி, புல்லம்பாக்கம், தினையாம்பூண்டி, வட்டம்பாக்கம், திருமுடிவாக்கம், சிங்கில்பாடி, திருப்புலிவனம், நடுவீரப்பட்டு ஆகிய 16 ஊராட்சிகளில், நாளை, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

