ADDED : டிச 28, 2024 08:19 PM
அ நிறம் | அளவு
உத்திரமேரூர்:சி.ஐ.டி.யு., கட்டுமான தொழிலாளர் சங்கம், உத்திரமேரூர் வட்டார கிளை சார்பில், வட்டார தலைவர் ஜெயகுமார் தலைமையில், உத்திரமேரூர் பேருந்து நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு, பொங்கல் சிறப்பு தொகுப்புடன், 5,000 ரூபாய் சேர்த்து வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
