sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

/

கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


ADDED : ஏப் 01, 2024 02:07 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சரக்கு வாகனத்தில் 42 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், சென்னையைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களுக்கு தலா, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா பொது முடக்கத்தின் போது, செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில், கடந்த 2020 ஜூலை 13ம் தேதி, வாகனங்களில் வரும் நபர்களிடம் 'இ---பாஸ்' உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா என, செங்குன்றம் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த 'அசோக் லேலண்ட் தோஸ்த்' வாகனத்தை சோதனை செய்தனர்.

அதில், நான்கு மஞ்சள் நிற சாக்கு பைகளில், 42 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது.

அவற்றை பறிமுதல்செய்த போலீசார், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஞானராஜ், 23, கொடுங்கையூரைச் சேர்ந்த புருசோத்தமன், 22, ஆகியோரை கைது செய்து, அவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது.

போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.சீனிவாசன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி,'வழக்கில் தொடர்புடைய நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

எனவே, அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us