sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளால் அவதி

/

தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளால் அவதி

தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளால் அவதி

தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளால் அவதி


ADDED : ஏப் 08, 2024 04:31 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதோடு விபத்திலும் சிக்கி வருகின்றன.

சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து, இலகு, கனரக, வாகனங்கள் என தினமும் 1 லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலை 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை - மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ நீளச் சாலை 4 வழிப்பாதையாகவும், குண்டு குழிகள் நிறைந்ததாகவும் இருந்ததால் வாகன ஒட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதையடுத்து 2014-ல் இச்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு 2018- இறுதியில் பணி துவங்கி நடந்து வருகிறது.மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் திருப்பெரும்புதூர் வரையிலான 23 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.

ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான 71 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணி மந்தகதியில் நடந்து வருகிறது.

இதில் திருமழிசை பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் டோல்கேட் வரை ஆறு வழிச்சாலை பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இந்த நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம், தண்டலம், பாப்பான்சத்திரம், செட்டிபேடு உட்பட பல பகுதிகளில் நெடுஞ்சாலையில் காவல் துறையினர் தடுப்புகள் வைத்துள்ளனர்.

இந்த தடுப்புகளால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிப்பதோடு விபத்துகளிலும் சிக்கி வருகின்றன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மீடியனில் தடுப்பு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மேல்வெண்பாக்கம் கூட்டு சாலை வழியாக, பனப்பாக்கம் பகுதிக்கு செல்லும் பிரதான கடவுப்பாதை உள்ளது.இந்த கடவுப்பாதையை கடந்து, சென்னை - பெங்களூரு மார்க்கம் மற்றும் பெங்களூரு - சென்னை மார்க்கமாக அரசு பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் செல்கின்றன.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள், இந்த கூட்டு சாலை அருகே திரும்பி செல்லும் போது, எதிர் திசையில் செல்லும் வாகனங்களால், அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதை தடுக்கும் விதமாக, பிரதான கடவுப்பாதையில் வாகனங்கள் செல்லாதவாறு, தேசிய நெடுஞ்சாலை துறையினர், மீடியனில் ஒரு அடி உயரத்திற்கு தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து தாமல் வழியாக பனப்பாக்கம் செல்வோர், அவளூர் கூட்டு சாலை கடவுப்பாதை வழியாக கடந்து, பனப்பாக்கம் செல்ல அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே வாகன விபத்தை தவிர்க்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது என, தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்து உள்ளனர்.



மீடியனில் தடுப்பு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மேல்வெண்பாக்கம் கூட்டு சாலை வழியாக, பனப்பாக்கம் பகுதிக்கு செல்லும் பிரதான கடவுப்பாதை உள்ளது.இந்த கடவுப்பாதையை கடந்து, சென்னை - பெங்களூரு மார்க்கம் மற்றும் பெங்களூரு - சென்னை மார்க்கமாக அரசு பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் செல்கின்றன.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள், இந்த கூட்டு சாலை அருகே திரும்பி செல்லும் போது, எதிர் திசையில் செல்லும் வாகனங்களால், அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதை தடுக்கும் விதமாக, பிரதான கடவுப்பாதையில் வாகனங்கள் செல்லாதவாறு, தேசிய நெடுஞ்சாலை துறையினர், மீடியனில் ஒரு அடி உயரத்திற்கு தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து தாமல் வழியாக பனப்பாக்கம் செல்வோர், அவளூர் கூட்டு சாலை கடவுப்பாதை வழியாக கடந்து, பனப்பாக்கம் செல்ல அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே வாகன விபத்தை தவிர்க்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது என, தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்து உள்ளனர்.








      Dinamalar
      Follow us