sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கூழமந்தலில் சித்திரை பெருவிழா விமரிசை

/

கூழமந்தலில் சித்திரை பெருவிழா விமரிசை

கூழமந்தலில் சித்திரை பெருவிழா விமரிசை

கூழமந்தலில் சித்திரை பெருவிழா விமரிசை


ADDED : ஏப் 29, 2024 05:01 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கூழமந்தல் மைதானத்தில், சித்திரை பெருவிழா நேற்று முன்தினம் இரவு 7:00 மணி முதல், நேற்று அதிகாலை வரை விமரிசையாக நடந்தது.

விழாவையொட்டி, கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பேசும் பெருமாள் அபிஷேகமும் மற்றும் திருமஞ்சனமும் நடைபெற்றது.

இதில் நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரர் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத பேசும் பெருமாள் கருட வாகனத்திலும் ஊர்வலமாகச் சென்று கூழமந்தல் மைதானத்தில் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதைத் தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு 16 வகையான நறுமணப் பொருட்களால் விசேஷ அபிஷேகமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

அம்பாள், சிவபெருமான் மற்றும் பெருமாள் ஆகியோரை விநாயக பெருமான், வலம் வந்து ஆசீர்வாதம் பெற்று, கஜமுக அசுரனை வதம் செய்யும் உன்னத நிகழ்ச்சியும், உலகத்தைக் காக்க மும்மூர்த்திகளுக்கு அருளுரை வழங்கும் நிகழ்வும் விமரிசையாக நடந்தது.

நிறைவாக மஹா தீபாராதனை, சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில், கூழமந்தல் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us