sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெல் கொள்முதல் நிலையம் பேரணக்காவூரில் அமைக்க எதிர்பார்ப்பு

/

நெல் கொள்முதல் நிலையம் பேரணக்காவூரில் அமைக்க எதிர்பார்ப்பு

நெல் கொள்முதல் நிலையம் பேரணக்காவூரில் அமைக்க எதிர்பார்ப்பு

நெல் கொள்முதல் நிலையம் பேரணக்காவூரில் அமைக்க எதிர்பார்ப்பு


ADDED : ஏப் 15, 2024 04:22 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், பேரணக்காவூரில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

இப்பகுதி விவசாயிகள் கடந்த ஆண்டுகளில், 5 கி.மீ., துாரத்தில் உள்ள அரும்புலியூர் மற்றும் சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்கள் நெல்லை விற்பனை செய்து வந்தனர்.

இதனிடையே, கடந்த ஆண்டு பேரணக்காவூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்பட்டது.

ஆனால், நடப்பாண்டில், உத்திரமேரூர் வட்டாரத்தின் பல பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டும், பேரணக்காவூரில் திறக்கப்படவில்லை.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

பேரணக்காவூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சம்பா பருவ சாகுபடிக்கு, 300க்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் நெல் பயிரிட்டு தற்போது அறுவடை பணிகளை துவக்கி உள்ளோம்.

பேரணக்காவூரில் கடந்த ஆண்டு, நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டதால், சிரமமின்றி நெல் கொள்முதல் செய்தோம். ஆனால், இந்த ஆண்டுக்கு அனுமதி கிடைக்காததால், அறுவடை செய்த நெல்லை வீடுகள் மற்றும் நெற்களங்களில் குவித்து வைத்துள்ளோம்.

எனவே, இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us