/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் குப்பை குவியல் அகற்ற வலியுறுத்தல்
/
சாலையோரம் குப்பை குவியல் அகற்ற வலியுறுத்தல்
ADDED : செப் 09, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அறப்பெருஞ்செல்வி குறுக்கு தெருவில், மின்மாற்றி அமைந்துள்ள பகுதியில் வசிப்பவர்கள், குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
துாய்மை பணியாளர்கள் தினமும் குப்பையை முறையாக அகற்றாததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், சாலையோரம் குவிந்துள்ள குப்பை குவியலால், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
அறப்பெரும்செல்வி குறுக்கு தெருவில் கொட்டப்படும் குப் பையை, துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

