/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உண்டு உறைவிட பயிற்சி மையத்தில் மாணவியருக்கு பட்டமளிப்பு விழா
/
உண்டு உறைவிட பயிற்சி மையத்தில் மாணவியருக்கு பட்டமளிப்பு விழா
உண்டு உறைவிட பயிற்சி மையத்தில் மாணவியருக்கு பட்டமளிப்பு விழா
உண்டு உறைவிட பயிற்சி மையத்தில் மாணவியருக்கு பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 29, 2024 05:06 AM

காஞ்சிபுரம், : உத்திரமேரூர் ஒன்றியம், விசூர் ஊராட்சியில் பள்ளி செல்லா, பள்ளி இடைநின்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, 'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' இணைந்து நடத்தும், பாரதியார் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் கடந்த கல்வி ஆண்டில் பயின்று, முறையான பள்ளியில் சேர்க்கப்பட உள்ள மாணவிருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் கிருபாகரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை வள்ளி, விசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குமார் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன துணைத் தலைவர் பிரேம் ஆனந்த், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனசேகர், ஊராட்சி தலைவர் மூர்த்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி ஆகியோர் மாணவியருக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினர்.
வட்டார மேற்பார்வையாளர் செந்தில் முருகன், ஆசிரியர் பயிற்றுனர் ராஜேஷ் முதுநிலை திட்ட மேலாளர்கள் துாயவன், சுந்தர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதேபோல, காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள பூங்காவனம் உண்டு உறைவிட சிறப்பு பள்ளியிலும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை திட்ட மேலாளர் ஜெகத்ரட்சகன் ஆசிரியர்கள் மனிஷா நிஷா, அனுஸ்ரீ ஆகியோர் செய்தனர்.

