sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பஸ்சில் பயணியரிடம் கனிவுடன் நடக்க ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அறிவுரை

/

பஸ்சில் பயணியரிடம் கனிவுடன் நடக்க ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அறிவுரை

பஸ்சில் பயணியரிடம் கனிவுடன் நடக்க ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அறிவுரை

பஸ்சில் பயணியரிடம் கனிவுடன் நடக்க ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அறிவுரை


ADDED : ஏப் 03, 2024 11:52 PM

Google News

ADDED : ஏப் 03, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,அரசு நகர பேருந்து மற்றும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியரிடம் சில பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மரியாதைச் குறைவாக நடந்து கொள்வதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் மேலாண் இயக்குனர், கோட்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களில் பணிபுரியும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும், கடந்த முதல் தேதி முதல், அனைத்து பேருந்து ஓட்டுனர் மற்றும்நடத்துனர்களுக்கு மண்டல பொதுமேலாளர்தட்சிணாமூர்த்தி அறிவுரைவழங்கி வருகிறார்.

அதன்படி, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று நகர பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதில், மகளிர், முதியோர், மாணவர்கள் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர் ஆகியோர் இடத்தில் மரியாதையாகவும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

பேருந்தில் ஏறுபவர்கள், இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய உதவ வேண்டும். முதியோர் பேருந்தில் ஏறி இறங்கும்போது அவர்களுக்கு உதவ வேண்டும்.

அனைத்து பேருந்துகளும் உரிய வழித்தடத்தில் நேரத்திற்கு இயக்க வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் சரியான இடத்தில் பேருந்துகளை நிறுத்தி பயணியரை ஏற்றி இறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

இதில், துணை மேலாளர், உதவி மேலாளர், காஞ்சிபுரம் கிளை மேலாளர், உதவி பொறியாளர் காஞ்சிபுரம் பேருந்து நிலைய நேரக்காப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us