sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தனியார் பேருந்து மோதி 2 வாலிபர்கள் உயிரிழப்பு

/

தனியார் பேருந்து மோதி 2 வாலிபர்கள் உயிரிழப்பு

தனியார் பேருந்து மோதி 2 வாலிபர்கள் உயிரிழப்பு

தனியார் பேருந்து மோதி 2 வாலிபர்கள் உயிரிழப்பு


ADDED : ஏப் 30, 2024 06:29 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மேகராஜ், 30. இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் நோக்கி, 'ராயல் என்பீல்டு புல்லட்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகே, பின்னால் வேகமாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்ற 'புல்லட்' பைக் மற்றும் மற்றொரு கே.டி.எம்., பைக் மீது மோதியது.

இந்த விபத்தில், தலையில் அடிபட்ட மேகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கே.டி.எம்., பைக்கில் வந்த இருவரில், மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 26, என்பவரும் அங்கேயே உயிரிழந்தார்.

அவருடன் வந்த பிரபாகரன், 31, என்பவர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து குறித்து, அப்பகுதிவாசிகள் அளித்த புகாரின்படி, சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், இருவரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கு காரணமான தனியார் தொழிற்சாலை பேருந்து ஓட்டுனர் ஏழுமலை, 55, என்பவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us