sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 டி.கீரனுாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தடுத்து நிறுத்த கிராம மக்கள் மனு

/

 டி.கீரனுாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தடுத்து நிறுத்த கிராம மக்கள் மனு

 டி.கீரனுாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தடுத்து நிறுத்த கிராம மக்கள் மனு

 டி.கீரனுாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தடுத்து நிறுத்த கிராம மக்கள் மனு


ADDED : டிச 23, 2025 07:13 AM

Google News

ADDED : டிச 23, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: டி.கீரனுாரில் குடியிருப்புகளுக்கு நடுவே கட்டப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை தடுத்து நிறுத்தக்கோரி கிராம பொதுமக்கள் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த டி.கீரனுார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்; டி.கீரனுார் ஊராட்சிக்குட்பட்ட புதுமண்டபம் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது.

இதனால், அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி சுமார் 500 ஏக்கர் விவசாய நிலமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் முறையிட்டோம். பல போராட்டங்கள் நடத்தினோம். ஆனாலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நிறுத்தப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி, டி.கீரனுாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us