sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சங்கராபுரத்தில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க நடவடிக்கை தேவை

/

சங்கராபுரத்தில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க நடவடிக்கை தேவை

சங்கராபுரத்தில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க நடவடிக்கை தேவை

சங்கராபுரத்தில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க நடவடிக்கை தேவை


ADDED : மார் 04, 2024 12:13 AM

Google News

ADDED : மார் 04, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககராபுரம் : சங்கராபுரத்தில் போக்குவரத்து போலீசாரை கூடுதலாக நியமிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கராபுரம் நகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. சங்கராபுரம் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு சங்கராபுரம் வந்து செல்கின்றனர்.

இரு சக்கர வாகனத்தில் வரும் வெளியூர் மக்கள் தங்கள் வாகனத்தை கடையின் முன்பு தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர். மேலும் பல கிராமங்களில் இருந்து சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு அதிக அளவில் பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் காலை, மாலை வேளைகளில் இயக்கப்படுகின்றன.

இதனால், சங்கராபுரம் நகர கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்தை சரி செய்ய போதுமான போக்குவரத்து போலீசார் இல்லாததால் அடிக்கடி டிராபிக் ஜாம் ஆகிறது. வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, சங்கராபுரம் நகரில் தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க சங்கராபுரத்திற்கு என தனியாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க எஸ்.பி., ஷ்ரவன்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us