sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 சங்கராபுரத்தில் தேசிய லோக் அதாலத்; ரூ. 1.79 கோடிக்கு சமரச தீர்வு 

/

 சங்கராபுரத்தில் தேசிய லோக் அதாலத்; ரூ. 1.79 கோடிக்கு சமரச தீர்வு 

 சங்கராபுரத்தில் தேசிய லோக் அதாலத்; ரூ. 1.79 கோடிக்கு சமரச தீர்வு 

 சங்கராபுரத்தில் தேசிய லோக் அதாலத்; ரூ. 1.79 கோடிக்கு சமரச தீர்வு 


ADDED : டிச 15, 2025 05:50 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 120 வழக்குகள், முடிக்கப்பட்டு ரூ.1.79 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய லோக் அதாலத் நடந்தது. சார்பு நீதிமன்ற நீதிபதி தனசேகரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பர்வதராஜ் ஆறுமுகம், நீதித்துறை நடுவர் ஆதியான் ஆகியோர் 120 வழக்குகளை சமரசமாக முடித்து ரூ. 1 கோடியே 79 லட்சத்து 77 ஆயிரத்து 790 வசூலித்து உரிய நபர்களுக்கு வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தம்பதியினர் நீதிபதிகளின் ஆலோசனைப்படி சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டனர். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த காசோலை வழக்குகள், குடும்ப தகராறு, விபத்து இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஒரே நாளில் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்கராபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் ரவி, செயலாளர் ராமசாமி, அரசு வழக்கறிஞர்கள் ரமேஷ்குமார், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us