sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாம்பிராணி ஆலையில் தீ விபத்து சின்னசேலத்தில் பரபரப்பு

/

சாம்பிராணி ஆலையில் தீ விபத்து சின்னசேலத்தில் பரபரப்பு

சாம்பிராணி ஆலையில் தீ விபத்து சின்னசேலத்தில் பரபரப்பு

சாம்பிராணி ஆலையில் தீ விபத்து சின்னசேலத்தில் பரபரப்பு


ADDED : மே 04, 2025 05:31 AM

Google News

ADDED : மே 04, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் : சின்னசேலம் அருகே சாம்பிராணி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட, தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பூண்டி, அம்மையகரம் கிராமத்தில் தனியார் ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

நேற்று பகல் 1:00 மணிக்கு ஆலையில் மூலப்பொருளான கரி துண்டுகள், அரைக்கும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் மூலப்பொருட்கள் இருப்பு வைத்திருந்த குடோன் மற்றும் ஆலை முழுவதும் தீ வேகமாக பரவியது.

இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் இருசம்மாள், சின்னசேலம் தீயணைப்பு அலுவலர் பரமசிவம் தலைமையிலான, 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து, மாலை 3:30 மணிக்கு தீயை போராடி அணைத்தனர்.

தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூல பொருட்கள் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us