/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் உடல் தானம்
/
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் உடல் தானம்
ADDED : ஏப் 22, 2024 06:25 AM
கள்ளக்குறிச்சி: எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியரின் உடல் தானம் பெறப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 82; எடுத்தவாய்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 20ம் தேதி இரவு இறந்தார். இவரது இறப்புக்கு முன் தனது உடலை தானம் செய்வதாக பதிவு செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுரையின்படி கள்ளக்குறிச்சி டி.ஆர்.ஓ., லுார்துசாமி மற்றும் அரசு அலுவலர்கள், எடுத்தவாய்நத்தம் கிராமத்திற்குச் சென்று பெரியசாமியின் உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பின், அவரது உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

