ADDED : ஜூலை 30, 2024 06:25 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: புக்குளம், ஆண்டிகொட்டாய் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
மனு விபரம்:
தியாகதுருகம் அடுத்த புக்குளம் ஆண்டிகொட்டாய் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர், கால்வாய், மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.
எனவே எங்களின் இடத்திற்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
