/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடல் புண் வலியால் அவதி போதை நபர் தற்கொலை
/
குடல் புண் வலியால் அவதி போதை நபர் தற்கொலை
ADDED : ஏப் 29, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம், : தியாகதுருகத்தில் குடல் புண் வலியால் அவதியடைந்த நபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; மதுப் பழக்கம் உடைய இவர், அடிக்கடி மது அருந்தியதால் குடலில் புண் ஏற்பட்டு அவதியடைந்து வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகாததால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

