sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குடிநீர் வராததை கண்டித்து வி.மாமாந்துாரில் சாலை மறியல்

/

குடிநீர் வராததை கண்டித்து வி.மாமாந்துாரில் சாலை மறியல்

குடிநீர் வராததை கண்டித்து வி.மாமாந்துாரில் சாலை மறியல்

குடிநீர் வராததை கண்டித்து வி.மாமாந்துாரில் சாலை மறியல்


ADDED : ஏப் 24, 2024 02:59 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 02:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : வி.மாமாந்துாரில் குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

சின்னசேலம் அடுத்த வி.மாமாந்துார் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதில், வடக்கு தெரு உட்பட 2 பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ளாமல் சிரமமடைந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன், நேற்று காலை 7.30 மணியளவில் அவ்வழியாக சென்ற அரசு பஸ்சினை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஊராட்சி தலைவர் மாயாண்டி, வரஞ்சரம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் விநியோகிக்க முடியவில்லை, தண்ணீர் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்வதாகவும், தற்காலிகமாக டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகிப்பதாகவும் ஊராட்சி தலைவர் மாயாண்டி தெரிவித்தார். இதனையடுத்து காலை 8.30 மணியளவில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us