/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுவர் இடிந்து தொழிலாளி பலி: கடை உரிமை-யாளர் கைது
/
சுவர் இடிந்து தொழிலாளி பலி: கடை உரிமை-யாளர் கைது
ADDED : அக் 03, 2024 06:54 AM
ஈரோடு: ஈரோடு, கனி மார்க்கெட் வணிக வளாக சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவத்தில், கடை உரிமையாளரை போலீசார் கைது செய்-தனர்.
ஈரோடு, கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் நான்கு தளங்களில் செயல்படுகிறது. முதல் தளத்தில் ஈரோடு, செட்டிபாளையம் முருகேசன், 52, என்பவர் கடை எண்-194ஐ வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு, பின்புறம் உள்ள மற்றொரு கடையை வாட-கைக்கு எடுத்தார். இரு கடைகளையும் இணைத்து விரிவாக்கம் செய்ய, இடையே உள்ள தடுப்பு சுவரை இடித்து, ஒரே கடையாக மாற்ற திட்டமிட்டார்.
கடந்த, 30 அதிகாலை, 2:30 மணியளவில் சுவரை இடிக்கும் பணியில் கருங்கல்பாளையம் சுப்பிர-மணி, 55, ஆனந்த், 45, ஆகியோர் பணி செய்தனர். அப்போது சுவர் இடிந்து இருவர் மீதும் விழுந்தது. இடிபாட்டில் சிக்கி சுப்பிரமணி இறந்தார். ஆனந்த் ஈரோடு அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.மாநகராட்சி கடையை வாடகைக்கு எடுத்த முரு-கேசன் மீது, அஜாக்கிரதையாக கட்டுமான பணி செய்தல், தொழிலாளியின் உயிரிழப்புக்கு கார-ணமாக இருந்தது என, இரு பிரிவுகளின் கீழ் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து முரு-கேசனை கைது செய்தனர். ஈரோடு நீதிமன்ற உத்-தரவுப்படி, கோபி மாவட்ட சிறையில் முருகே-சனை அடைத்தனர்.தவிர, வணிக வளாக கடையை வாடகைக்கு எடுத்த ஒப்பந்த விதியை மீறியதாகவும், கடையை சேதப்படுத்தியதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் போலீசில் புகார் செய்துள்ளனர். மேலும், கடையை சேதப்படுத்தியதற்காக, முரு-கேசனுக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதித்து, கடை வாடகை ஒப்பந்தம் ரத்து செய்து, கடையை பறிமுதல் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

