sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் புடவை ஜவுளி தொழிலில் முன்னேற்றம் வரும்?

/

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் புடவை ஜவுளி தொழிலில் முன்னேற்றம் வரும்?

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் புடவை ஜவுளி தொழிலில் முன்னேற்றம் வரும்?

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் புடவை ஜவுளி தொழிலில் முன்னேற்றம் வரும்?


ADDED : செப் 27, 2024 01:27 AM

Google News

ADDED : செப் 27, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் புடவை

ஜவுளி தொழிலில் முன்னேற்றம் வரும்?

காங்கேயம், செப். 27-

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில், பக்தர்கள் கனவில் சுப்ரமணியசுவாமி கூறும் பொருள் வைக்கப்பட்டு, பூஜை செய்யப்படும் நிகழ்வு, நுாற்றாண்டாக நடக்கிறது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் இடம்

பெறும்.

பெட்டியில் வைக்கப்படும் பொருள், நடப்பதை முன்கூட்டி கணிப்பதாக அமையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.

இதற்கு முன் பெட்டியில் மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு,நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இரும்பு சங்கிலி, ருத்ராட்சம் என பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளது.

ஆக., 17ம் தேதி முதல் இரு இளநீர் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வீரணம் கிராமம் சிவக்குமார், 30, என்ற பக்தரின் கனவில் சிவப்புநிற புடவை வைக்க உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் புடவை வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இளநீர் வைத்தபோது தேங்காய், தேங்காய் பருப்பு விலை கூடியது குறிப்பிடதக்கது. 'புடவை வைத்துள்ளதால் ஜவுளி உற்பத்தி, நெசவு தொழில் ஏற்றம் பெறலாம்' என்று, கோவில் சிவாச்சாரியார் ஒருவர்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us