sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜவுளி வாரச்சந்தைக்கு அனுமதி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு

/

ஜவுளி வாரச்சந்தைக்கு அனுமதி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு

ஜவுளி வாரச்சந்தைக்கு அனுமதி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு

ஜவுளி வாரச்சந்தைக்கு அனுமதி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு


ADDED : மார் 09, 2024 12:48 AM

Google News

ADDED : மார் 09, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் சக்திவேல், நுார்சேட் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் நேற்று மனு வழங்கி

கூறியதாவது:

ஈரோடு கனி மார்க்கெட்டில், 720 வாரச்சந்தை கடைகள் செயல்பட்டன. பல்வேறு பகுதி சிறு, குறு வியாபாரிகள், ஜவுளிகளை விற்பனை செய்தனர். கடந்த, 2019 ல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்

கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டும் பணி துவங்கியது. அப்போதைய ஆணையர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், 'கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டி முடித்து, மீதி இடத்தில் வாரச்சந்தை கடை வைக்க அனுமதி பெற்றுத்தருகிறோம்' என உறுதியளித்தனர்.

வணிக வளாக கட்டுமான பணி முடிந்து, தினசரி கடைகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, வாரச்சந்தை கடைகளை அமைத்து கொடுக்க வேண்டும். இதனால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us