sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.10க்கு காலி பாட்டிலை சேகரிப்பதில் சிக்கல் கைவிட டாஸ்மாக் தொழிலாளர் வலியுறுத்தல்

/

ரூ.10க்கு காலி பாட்டிலை சேகரிப்பதில் சிக்கல் கைவிட டாஸ்மாக் தொழிலாளர் வலியுறுத்தல்

ரூ.10க்கு காலி பாட்டிலை சேகரிப்பதில் சிக்கல் கைவிட டாஸ்மாக் தொழிலாளர் வலியுறுத்தல்

ரூ.10க்கு காலி பாட்டிலை சேகரிப்பதில் சிக்கல் கைவிட டாஸ்மாக் தொழிலாளர் வலியுறுத்தல்


ADDED : மே 21, 2024 11:38 AM

Google News

ADDED : மே 21, 2024 11:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், சதீஸ்குமார் ஆகியோர், பெட்டியில் மனு போட்டு கூறியதாவது:

கடந்த, 20 ஆண்டுகளாக சொற்ப சம்பளத்தில் டாஸ்மாக்கில் பணி செய்கிறோம். அரசுக்கு பெரிய வருவாயை ஈட்டிக்கொடுக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் சமீப காலமாக சமூக விரோதிகளால் சுட்டு கொல்லப்பட்டும், ஆயுதங்களால் தாக்கப்பட்டும் பாதிக்கின்றனர்.

தமிழக அரசும், காவல் துறையும் இணைந்து, இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபமாக டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை சேகரம் செய்வது தொடர்பான பணியை வழங்கி, ஒரு பாட்டிலுக்கு நுகர்வோருக்கு, 10 ரூபாய் வழங்க கூறி வருகின்றனர். நுகர்வோர் பயன்படுத்திய பாட்டிலை மீண்டும் கடைகளில் சேகரித்து, 10 ரூபாய் வீதம் வழங்கி அதனை கணக்காக பராமரித்து, வங்கி தொகையில் ஈடுசெய்வது சிரமமானது.

இடபற்றாக்குறை உள்ளதால், பாட்டில் சேமிப்பதை கைவிட வேண்டும். மற்ற அரசு துறைகளில் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 58 ல் இருந்து, 60 என உயர்த்தி வருவதால், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை, 60 என உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us