ADDED : நவ 06, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், நவ. 6-
காங்கேயத்தில் சென்னிமலை முதல் காங்கேயம் வரையுள்ள சாலையில், 37 கோடி ரூபாய் மதிப்பில், 6 கி.மீ., தொலைவுக்கு, திட்டுப்பாறை முதல் ஆலாம்பாடி வரை, நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னையில் நடந்த நெடுஞ்சாலைத் துறை ஆய்வுக் கூட்டத்தில், இந்த சாலைப்பணியை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து திருப்பூர் கோட்டப் பொறியாளர் ரத்தினசாமி, நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இதில் முடிவுற்ற சாலை பணியின் தரத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவிப்பொறியாளர் ரஞ்சித், பணியாளர்கள் உடனிருந்தனர்.

