sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பணிக்கு திரும்பிய எஸ்.பி., அலுவலக ஊழியர்

/

பணிக்கு திரும்பிய எஸ்.பி., அலுவலக ஊழியர்

பணிக்கு திரும்பிய எஸ்.பி., அலுவலக ஊழியர்

பணிக்கு திரும்பிய எஸ்.பி., அலுவலக ஊழியர்


ADDED : டிச 20, 2024 07:08 AM

Google News

ADDED : டிச 20, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு எஸ்.பி., அலுவலக நிர்வாக அதிகாரி ரகு மீது, காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர், பாலியல் உள்ளிட்ட புகார்களை, எஸ்.பி.,யிடம் சில மாதத்துக்கு முன் அளித்தனர். அதன் மீதான விசாரணையை தொடர்ந்து, சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதேசமயம் புகார் தெரிவித்த சங்கத்தை சேர்ந்த ஏழு பணியாளர்களும் மாற்றம் செய்யப்பட்டனர். பணியாளர்களின் உத்தரவை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். பெண் ஊழியர்கள் இரவு, 7:00 மணிக்கு மேல் பணி செய்ய உத்தரவிடுவதை கைவிடக்கோரி, காவல்துறை அமைச்சு பணியாளர்கள், ௧௭, ௧௮ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று போராட்டத்தை ஒத்தி வைத்து பணிக்கு திரும்பினர்.

இதுகுறித்து காவல்துறை அமைச்சு பணியாளர் சங்க கிளை தலைவர் முத்துகுமாரலிங்கம் கூறியதாவது: சென்னையில் சங்க மாநில நிர்வாகிகளுடன், போலீஸ் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததால், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us