/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சலுகை அறிவித்த கடைக்கு பூட்டு ஆர்வத்துடன் திரண்டோர் அதிர்ச்சி
/
சலுகை அறிவித்த கடைக்கு பூட்டு ஆர்வத்துடன் திரண்டோர் அதிர்ச்சி
சலுகை அறிவித்த கடைக்கு பூட்டு ஆர்வத்துடன் திரண்டோர் அதிர்ச்சி
சலுகை அறிவித்த கடைக்கு பூட்டு ஆர்வத்துடன் திரண்டோர் அதிர்ச்சி
ADDED : டிச 17, 2025 07:26 AM
தாராபுரம்: தாராபுரத்தில் பல்வேறு சலுகைகளை அறிவித்த நிலையில், கடை பூட்டி கிடந்ததால், அதிர்ச்சி அடைந்த மக்கள், கடையை முற்று-கையிட்டனர்.
தாராபுரத்தில் அமராவதி சிலை ரவுண்டானா அருகே, கடந்த, ௧௩ம் தேதி புதிய ஷாப்பிங் மால் திறக்கப்பட்டது. இங்கு பல்-வேறு பொருட்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டதால், இரு தினங்களாக கூட்டம் அலைமோதியது. நேற்று சலுகை விலையில் பொருட்களை வாங்க மக்கள் கடை முன் திரண்டனர். ஆனால் கடை பூட்டியிருந்ததால் முற்றுகையிட்டனர். மக்கள் கூட்-டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, தாராபுரம் போலீசார் சென்றனர். மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனி-டையே கடை நிர்வாக தரப்பில், வேறிடத்தில் சலுகை விலையில் பொருட்கள் வழங்கப்படுவதாக பேனர் கட்டப்பட்டது. இச்சம்ப-வத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

