sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கட்டாய கல்வி உரிமை சட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

/

கட்டாய கல்வி உரிமை சட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

கட்டாய கல்வி உரிமை சட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

கட்டாய கல்வி உரிமை சட்டம் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஏப் 21, 2024 02:04 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி வரும் கல்வியாண்டுக்கு அனைத்து சிறபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இதற்காக வரும், 22 முதல் மே, 20க்குள் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மெட்ரிக், சுயநிதி, துவக்க, மழலையர் பள்ளியில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரலாம். எல்.கே.ஜி., மற்றும் 1ம் வகுப்புக்கு விண்ணப்பிக்க வீட்டு முகவரியில் இருந்து, பள்ளிக்கு அருகே, 1 கி.மீ.,க்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள், ஈரோடு சி.இ.ஓ., அலுவலகம், டி.இ.ஓ., அலுவுலகங்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வளமையம், 14 வட்டார கல்வி அலுவலகங்களிலும் மற்றும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

குழந்தையின் சமீபத்திய போட்டோ, பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். இவற்றை பதிவேற்றம் செய்யும்போது, குழந்தையின் புகைப்படமும் பதிவேற்றப்பட வேண்டும். இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us