sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிறுத்தப்பட்ட கால்நடை கலப்பு தீவன தயாரிப்பு ஆவினில் மீண்டும் துவக்கம்

/

நிறுத்தப்பட்ட கால்நடை கலப்பு தீவன தயாரிப்பு ஆவினில் மீண்டும் துவக்கம்

நிறுத்தப்பட்ட கால்நடை கலப்பு தீவன தயாரிப்பு ஆவினில் மீண்டும் துவக்கம்

நிறுத்தப்பட்ட கால்நடை கலப்பு தீவன தயாரிப்பு ஆவினில் மீண்டும் துவக்கம்


ADDED : செப் 28, 2024 01:25 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, செப். 28-

ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நேற்று நடந்தது.

கூட்ட விவாதம் வருமாறு:

* தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் ராஜூ: ஆவின் தயாரித்து வழங்கும் கால்நடை கலப்பு தீவன உற்பத்தி கடந்த செப்., மாதம் நிறுத்தப்பட்டது. அவற்றை உண்டு பழகிய மாடுகள், தண்ணீர் கூட குடிக்க மறுக்கிறது. எனவே கலப்பு தீவன உற்பத்தியை துவங்கி வழங்க வேண்டும். ஆவின் நிர்வாகம், பால் உற்பத்தியாளர் யூனியனுக்கு, 80 லட்சம் ரூபாய், ஊழியர்களுக்கு, 19 லட்சம் ரூபாய், ஊக்கத்தொகை, 3.50 கோடி ரூபாய் வழங்காமல் நிலுவை வைத்துள்ளது.

* ஆவின் அதிகாரி: ஈரோடு ஆவின் நிர்வாகத்தின் கால்நடை தீவன உற்பத்தி ஆலைக்கு மொலாசஸ் வரத்தாகவில்லை. மஹராஷ்டிராவில் இருந்து நேற்று முன்தினம் வரத்தாகி நேற்று உற்பத்தி துவங்கிவிட்டது. அமுல் நிறுவனத்திடம், 350 டன் ஆர்டர் போட்டுள்ளோம். சில நாளில் வந்துவிடும். இருப்பினும் வரும் திங்கள் முதல் தட்டுப்பாடு இன்றி விற்பனையாகும். பாலுக்கான ஊக்கத்தொகை கடந்த ஜூன் வரை பாக்கி இல்லை. அதன் பின் வழங்க வேண்டியவர்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து ஆய்வு செய்து அவ்வப்போது நடவடிக்கை எடுக்கிறோம். 30 யூனிட் வரை மூடி உள்ளோம். மஹாராஷ்டிரா, மும்பை போன்ற இடங்களில் இருந்து மொத்தமாக இங்கு வரத்தாகிறது. அவற்றை வைத்துள்ள குடோன்களையும், கடைகளையும் கண்காணிக்கிறோம்.






      Dinamalar
      Follow us