/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் பொங்கல் விழா
/
ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED : டிச 26, 2025 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: கொங்கு வேளாள கவுண்டர், ஈஞ்சன் குலத்தினரின் குலதெய்வ-மான, சென்னிமலை - பெருந்துறை பிரதான சாலையில் உள்ள ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா நேற்று நடந்தது.
ஈங்கூர் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆயி-ரக்கணக்கானோர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இன்று மதியம் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறு-கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் வெங்கடேஸ்வரன், செயலாளர் சாந்தமூர்த்தி, பொருளாளர் துரை-சாமி மற்றும் நிர்வாகிகள், ஈஞ்சன் குல பங்காளிகள் செய்தனர்.

