sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆண்கள் மட்டுமே வழிபாடு 1,875 கிலோ கறி சமைத்து விருந்து

/

ஆண்கள் மட்டுமே வழிபாடு 1,875 கிலோ கறி சமைத்து விருந்து

ஆண்கள் மட்டுமே வழிபாடு 1,875 கிலோ கறி சமைத்து விருந்து

ஆண்கள் மட்டுமே வழிபாடு 1,875 கிலோ கறி சமைத்து விருந்து


ADDED : பிப் 05, 2024 11:25 AM

Google News

ADDED : பிப் 05, 2024 11:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அருகே, ஆண்கள் மட்டுமே வழிபாடு செய்த கோவிலில், 1,875 கிலோ கறி சமைத்து விருந்து போடப்பட்டது.

நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியை ஒட்டியுள்ள போதமலை தொடர்ச்சியில், பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பணார் கோவில் உள்ளது. மலைவாழ் மக்களுக்கான இக்கோவிலில், ஆண்கள் மட்டுமே சென்று வழிபாடு செய்வது வழக்கம். ஆண்டுதோறும் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கிடா வெட்டி சமபந்தி விருந்து வைக்கப்படும்.

இதையொட்டி, நேற்று மாலை, 4:00 மணிக்கு சமபந்தி விருந்துக்கான பூஜைகள் தொடங்கின. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பூஜையின் முடிவில், 45 ஆட்டு கிடாக்கள், 60, பன்றிகள், 25 சேவல்கள் பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது. கடந்தாண்டு தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, பன்றி, சேவல்களை பலியிட காணிக்கையாக கொடுத்தனர்.

இதில், 500 கிலோ ஆட்டுக்கறி, 75 கிலோ கோழிக்கறி, 1,300 கிலோ பன்றிக்கறி என, 1,875 கறி தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து மலையடிவாரத்தில் உள்ள வயலில் சமபந்தி விருந்துக்கான சமையல் செய்யப்பட்டது. 2,000 கிலோ அரிசி மூலம் உணவு தயாரிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே சமையல் செய்தனர். இதில், 7,000க்கும் மேற்பட்ட ஆண்கள் விருந்து சாப்பிட்டனர்.






      Dinamalar
      Follow us