ADDED : நவ 19, 2025 01:50 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனார் நினைவஞ்சலி கூட்டம், ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில், கருங்கல்பாளையம் ரங்கபவனம் அருகே நடந்தது.
பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் புனிதன் முன்னிலை வகித்தனர். இதில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட சோழிய வெள்ளாள பிள்ளை சங்க தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
