sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முருகன் கோவிலில் நன்கொடை 'கியூ ஆர் கோடு ' வசதி அறிமுகம்

/

முருகன் கோவிலில் நன்கொடை 'கியூ ஆர் கோடு ' வசதி அறிமுகம்

முருகன் கோவிலில் நன்கொடை 'கியூ ஆர் கோடு ' வசதி அறிமுகம்

முருகன் கோவிலில் நன்கொடை 'கியூ ஆர் கோடு ' வசதி அறிமுகம்


ADDED : பிப் 15, 2024 11:00 AM

Google News

ADDED : பிப் 15, 2024 11:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவிலுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். வாரம் தோறும் செவ்வாய்கிழமை, சஷ்டி, கிருத்திகை, அமாவாசை உள்ளிட்ட விழா காலங்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து, முருகப்பெருமானை வணங்கி செல்வதுடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

திருவிழா நேரத்தில் வரிசையில் காத்திருந்து, நன்கொடைகள் வழங்கவும், அன்னதானத்திற்கு தனியாகவும், திருப்பணிகளுக்கு தனியாகவும், வேண்டுதல் செய்ய பொது நன்கொடை தனியாகவும் செலுத்துவதில் பக்தர்களுக்கு சிரமம் இருந்து வருகிறது. மேலும் ரசீது பெறுவதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பக்தர்கள் சிரமம் இன்றி நன்கொடைகள் செலுத்த வசதியாக, 'கியூ ஆர் கோடு' வசதியை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.

இது குறித்து, சென்னிமலை மலை மீது கோவில் வளாகத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மேலும் டிக்கெட் வழங்கும் கவுன்டரில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதி செய்துள்ளனர். நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு அது குறித்த தகவல், ரசீது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us